செட்டிநாடு / காரைக்குடி மீன் குழம்பு
தேவையான பொருட்கள்
- மீன் – 1 /2 கிலோ
- புளி – எலுமிச்சை அளவு
- பூண்டு – 15 பல்
- சின்ன வெங்காயம் – 10
- தக்காளி – 1
- மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி
- மிளகாய்த்தூள் – 1 1 /2 – 2 தேக்கரண்டி
- மல்லித்தூள் – 3 தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- தேங்காய் துருவியது – 1 /4 கப்
- மிளகு – 10 – 15
- சீரகம் – 2 தேக்கரண்டி
- கருவேப்பிலை – 2 கொத்து
- சீரகம் – 1 /2 தேக்கரண்டி
- மிளகு – 1 /2 தேக்கரண்டி
- வெந்தயம் – 10
- கருவேப்பிலை – ஒரு கொத்து
- நல்லெண்ணெய் – 1 /4 கப்
- புளியை 1 /2 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
- தேங்காய், மிளகு, சீரகம், கருவேப்பிலை ஆகியவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- வெங்காயம், பூண்டு ஆகியவற்றை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை நடுத்தர துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- மீனை பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- கடாயில் என்னை ஊற்றி சீரகம், மிளகு, வெந்தயம், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- பின் பூண்டு, வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். தக்காளி சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கவும்.
- பின் புளித்தண்ணீர், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன், அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து குழம்பு திக்காகும் வரை கொதிக்க விடவும்.
- வெட்டி வைத்துள்ள மீன் துண்டுகளைச் சேர்த்து 10 நிமிடங்கள் வேக விட்டு இறக்கவும்.
- மீன் குழம்பு சாதத்துடன் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும்.
- மீன் துண்டுகளை இறுதியாக குழம்பில் சேர்க்க வேண்டும். முன்பே சேர்த்தால் மீன் குழம்பில் கரைந்து விடும்.
0 comments:
Post a Comment