இட்லி பொடிமாஸ்
இட்லி -10
வெங்காயம்-2
பச்சை மிளகாய்-4
கடுகு, உளுத்தம்பருப்பு-1டீஸ்பூன்
எண்ணெய்-3 டீஸ்பூன்
கறிவேப்பிலை-சிறிதளவு
எப்படி செய்வது?
இட்லியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். வெங்காயம், பச்சைமிளகாயைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, உளுந்தம்பருப்பை தாளித்து கறிவேப்பிலையை போட்டு வெங்காயம், பச்சைமிளகாயைப் போடவும். பிறகு நறுக்கி வைத்துள்ள இட்லியைப் போட்டு நன்றாக சூடு வரும் வரை கிளறவும். காலையில் அவித்த இட்லியை இரவு நேரத்தில் இதுபோல் செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
0 comments:
Post a Comment