தந்தூரி சிக்கன் செய்வது எப்படி
தேவையான பொருட்கள்
- கோழி தொடை - 4
- எண்ணெய் - 1/2 லிட்டர்
- ஜிலேபி பவுடர் - சிறிது
- மைதா மாவு - 50 கிராம்
- கடலை மாவு – 50 கிராம்
- சில்லி சிக்கன் பவுடர் – 50 கிராம்
- எலுமிச்சை பழம் – 1
- இஞ்சி,பூண்டு விழுது – 2 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- முட்டை - 1 (வெள்ளை கரு மட்டும்)
செய்முறை:-
- கோழியை சுத்தம் செய்து அதில் கத்தியை வைத்து அங்கும் இங்கும் மாக சிறிது கீறல் போடவும்.(கறியில் மசாலா நன்கு சேர்வதற்க்காக)
- ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, கடலை மாவு, சில்லி சிக்கன் பவுடர், இஞ்சி,பூண்டு விழுது, முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
- இந்த கலவையில் எலுமிச்சை சாற்றை பிழிந்து அத்துடன் கலருக்காக சிறிது ஜிலேபி பவுடரையும் சேர்த்து அனைத்தும் ஒன்று சேர நன்கு கலக்கவும்.இந்த கலவையில் கறியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
- பின்பு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றவும்.
- எண்ணெய் நன்கு கொதிக்கும் போது கறியை அதில் போட்டு நன்கு வேக விடவும்.
- கறி கோழி வேகும் போது திருப்பி திருப்பி போட வேண்டும்.
- ( மிக மிக முக்கியம் ) அடுப்பு குறைந்த அளவு வெப்பத்தில் இருக்க வேண்டும்.
- கறி நன்கு வெந்து பொன்னிறமாக வந்தவுடன் எடுத்து விடவும்.
0 comments:
Post a Comment